புதன், 7 மார்ச், 2012

கிருஷ்ணகிரி



மாவட்டங்களின் கதைகள் - கிருஷ்ணகரி மாவட்டம்(Krishnakiri)



கிருஷ்ணகிரி

குன்றுகள் நிறைந்த தளி 'குட்டி இங்கிலந்து' என அழைக்கப்படுகிறது.


அடிப்படைத் தகவல்கள்:


தலைநகர்
 கிருஷ்ணகிரி
பரப்பு
 5,143 ச.கி.மீ.
மக்கள்தொகை
 15,46,700
ஆண்கள்
 7,95,718
பெண்கள்
 7,50982
மக்கள் நெருக்கம்
 301
ஆண்-பெண்
 944
எழுத்தறிவு விகிதம்
 58.11%
புவியியல் அமைவு
அட்சரேகை
 11012-12-49N
தீர்க்க ரேகை
 770-27-780388E


நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 2: கிருஷ்ணகிரி, ஒசூர்,
தாலுகாக்கள்-5: கிருஷ்ணகிரி, ஒசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, நகராட்சிகள்-2: கிருஷ்ணகிரி, ஓசூர்
ஊராட்சி ஒன்றியங்கள்-10: கெலமங்கலம், தளி, சூளகிரி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மாத்தூர், ஊத்தங்கரை, ஒசூர்.
எல்லைகள்: கிழக்கில் வேலூர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும்; மேற்கில் கர்நாடக மாநிலமும், வடக்கில் ஆந்திர மாநிலமும், தெற்கில் தரும்புரி மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சங்க காலத்தின் 'நெல்லிக் கனி' புகழ்பெற்ற அதியமான் ஆண்ட தகடூர் பகுதி.

பல்லவர், சுங்கர் நுளம்பர், சோழர், ஹொய்சாளர்கள், மைசூர் உடையார்கள், மதுரை நாயக்கர்கள் என்று பல்வேறு ஆட்சியின் கீழ் இருந்தது.

மாவட்டத்தின் 'குண்டனி' பகுதி 13-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னன் வீர ராமநாததனின் தலைமையிடமாக இருந்த்து.  முதல் மைசூர் போரில் காவேரிப்பட்டினத்திலுள்ள ஹைதரலியைத் தாக்க இவ்வழியாகச் சென்ற பிரிட்டிஷ் இராணவும் இங்கே தோல்வியைத் தழுவியது.  இரண்டாம் மைசூர் போரில் சேரம் மற்றும் கர்நாடகப் பகுதிகள் முழுமையும் ஹதாலியின் ஆதிக்கத்திற்குட்பட்டன.

ஶ்ரீரங்கப் பட்டின ஒப்பந்த்த்தை அடுது சேலம் மற்றும் பாரமைஆல்பகுதிகள் முழுமையும் பிரிட்டீஷார் வசமாயின.

1792-இல் காப்டன் அலெக்சாண்டர் ரீட் இப் பகுதியிஃன முதல் ஆட்சித்தலைவரானார்.  அன்றைய சென்னை மாகாண ஆளுனர் ராபர்ட் கிளைவின் ராஜதந்திரத்தால் கிருஷ்ணகிரி பாரமஹாலின் தலைநகரானது

1794இல் இங்கு நாணயச் சாலை ஒன்று உருவாக்கப்பட்டது.  தங்கம், வெள்ளி, செம்பு நாணங்கள் இங்கு வார்க்கப்பட்டன.

2004 பிப்ரவரி 9-ஆம் தேதி தரும்புரி மாவட்டம் இரண்டாகப்பிரிக்கபட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.  இது தமிழகத்தின் 30 ஆவது மாவட்டம்.

முக்கிய ஆறுகள்: காவிரி, தென்பெண்ணை, வன்னியாறு, மார்க்கண்டா ஆறு.

குறிப்பிடதக்க இடங்கள்

ஓசூர்: ஓசூர் என்றால் புதிய நகர் என்று பொருள்.  பெங்களூரின் அருகேயுள்ள இது பிரபலமான தொழில் நகரம்.

கிருஷ்ணகிரி அணைக்கட்டு: தரும்புரிக்க்கும், கிருஷ்ணகிரிக்கும் இடையே அமைந்துள்ள இந்த அணைக்கட்டால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலகங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ராஜாஜி நினைவில்லம்: தொரப்பள்ளியில் அமைந்துள்ள ராஜாஜியின் இல்லம். ஒசூரிலிருந்து பத்து  கி.மீ. தொலைவு.

மாம்பழத் திருவிழா: ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நிகழும் கிருஷ்ணகிரி மாம்பழத் திருவிழா பிரபலமானது.  ருமானி, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி போன்ற பலவகை மாம்பழங்கள் பார்வையாளர்களின் மனதையும் வயிறையும் ஒருசேர மயக்கும்.

இருப்பிடமும், சிறப்புகளும்:

சென்னையிலிருந்து 245 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ரோஜா உட்பட கண்கவர் மலர் வகைகளுக்கு புகழ்பெற்ற நகரம் ஒசூர்.

மலை மீது அமர்ந்துள்ள சந்திரசூடேஸ்வரர் ஆலயம் மிகப் பிரபலமானது.

பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பெரி சாகுபடிக்கு பெயர்பெற்றது.

இருளர் பழங்குடிகள், தேன்கனிக்கோட்டை மலைப்பகுதியில் வாழ்கின்றனர்.

இப்பகுதியின் 12 கோட்டைகள் 'பாரமகால் கோட்டைகள்' எனப்பட்டன.

விஜயநகரப் பேரரசால் கட்டபட்ட கிருஷ்ணகிரி மலைக் கோட்டை தற்போதும் சிறப்புடன் உள்ளது.

இந்தியாவில் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல் இராஜாஜி பிறந்த இடம் தொரப்பள்ளி.

மாவட்டம் வழியாகச் செல்லுத் தேசிய நெடுஞ்சாலைகள்:


NH-7 
கன்னியாகுமரி-காஷ்மீர்
NH-46
சென்னை-பெங்களூர்
NH-66
பாண்டிச்சேரி-பெங்களூர்
NH-207
சர்ஜாபூர்-பாகலூர் -ஓசூர்
NH-219
கிருஷ்ணகிரி-குப்பம்




கொஞ்சம் குறும்பு:


தம்பி..! நீ ரொம்ப நல்லா வருவப்பா..! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக