வியாழன், 8 மார்ச், 2012

பெரம்பலூர் மாவட்டம்


மாவட்டங்களின் கதைகள் - பெரம்பலூர் மாவட்டம்( PERAMBLLUR DISTRICT)


பெரம்பலூர் மாவட்டம்
( PERAMBLLUR DISTRICT)

தொல்லுயிர் எச்சங்களின் படிவு கொண்ட சாத்தனூர் மரப்படிவு அமைந்துள்ள மாவட்டம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்பெரம்பலூர்
பரப்பு3,691 ச.கி.மீ
மக்கள்தொகை4,93,646
ஆண்கள்2,46,141
பெண்கள்2,47,505
மக்கள் நெருக்கம்282
ஆண்-பெண்1,006
எழுத்தறிவு விகிதம்66.07
இந்துக்கள்4,60,058
கிருத்தவர்கள்8,412
இஸ்லாமியர்த 24,778

புவியியல் அமைவு
அட்சரேகை: 100-57-110.30N
தீர்க்கரேகை: 780.40-790.30E
இணையதளம்www.peramballur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrpmb@tn.nic.in
தொலைபேசி: 04328-225700

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 1: பெரம்பலூர்
தாலூகாக்கள் - 3: பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம்
நகராட்சி-1: பெரம்பலூர்
ஊராட்சி ஒன்றியங்கள் - 4: பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர்.
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:

  • சென்னையிலிருந்து 267 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • கடற்கரை இல்லா உள்மாவட்டம்.
  • ஜிப்சம், சுண்ணாம்புக்கல், நிலக்கரி, அரளைக் கற்கள் என்று கனிம வளம் மிகுந்தது.
  • தமிழகக் கலைத் திறனை உலகம் முழுவதும் பறைசாற்றும் மரச்சிற்பங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகில் உள்ள தழுதழை கிராமத்தில் உருவாக்கப்படுகின்றன.
  • துறையூர் சுருட்டு உலகப் புகழ்பெற்றது.


எல்லைகள்: இதன் வடக்கில் கடலூர், தெற்கில் திருச்சி, கிழக்கில் அரியலூர், தஞ்ஞாவூர், மேற்கில் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திருச்சி மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் இதன் முற்கால வரலாறு என்பது திருச்சி மாவட்ட வரலாறே..

1995 இல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர்) பெரம்பலூர் மாவட்டம் உருவானது.

பிற்பாடு 2000 ஆண்டில் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூர் என்னும் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 2002 இல இந்த இரு மாவட்டங்களும் பெரம்பலூர் மாவட்டமாக ஒன்றிணைக்கப்பட்டது.

முக்கிய ஆறுகள்: வெள்ளாறு மற்றும் கொள்ளிடம்.
குறிப்பிடத்தக்க இடங்கள்

சோழகங்கம் ஏரி: முதலாம் இராசேந்திரச் சோழன் தனது வெற்றியைக் குறிக்கும் நினைவாக உருவாக்கிய 'வெற்றி நீர்த்தூண்' ஐந்து கி.மீ. தொலைவிற்கு நீண்டு பரந்து கிடக்கும். இந்த ஏரி 130 ச.கி.மீ. பரப்பளவு வயல்களுக்குப் பாசனம் அளித்து வருகிறது.
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில்

மாவட்டத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று. சித்திரை மாதம் முதல் நாளில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

ரஞ்சன் குடி கோட்டை: கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தார்ராக இருந்த ஒருவரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கச்சிதமாகச் செதுக்கப்பட்ட கல் சதுரங்களால் கட்டப்பட்ட இக் கோட்டைக்குள் ஓர் அரண்மனை, குடியிருப்புக் கட்டிடங்கள், பாதாள அறை, மசூதி மற்றும் கொடி மேடை ஆகியவை உள்ளன.

பச்சைமலை அருவி: பெரம்பலூரிலிருந்த 17 கி.மீ. தூரத்தில் வாடபுரம் கிராமத்தின் அருகிலுள்ள பச்சை மலை மயில் ஊற்று நீர் அருவி.

செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்: குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவிலில் வருடம்தோறும் ஜனவரியில் தைப்பூசத்தின் போது பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

துருவக் கோட்டை: மங்களமேடு அருகில் உள்ளது.

சாத்தனூர் மரப்படிவு: Fossil Tree.

பிற இடங்கள்: செட்டிகுளம் பால தண்டாயுத பாணி ஆலயம், கள்ளக்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஆலயம், லப்பை குடிகாடு பெரிய தர்கா
தமிழக மாவட்டங்களின் முக்கியமான மலைகளின் பெயர்களை மாவட்ட வாரியாக வரிசைப்படுத்தி உள்ளேன். 

மலைகளும் மாவட்டங்களும்
அகஸ்தியர் மலை திருநெல்வேலி
ஏலகிரி மலை வேலூர்
கஞ்ச மலை சேலம்
கல்வராயன் மலை திருநெல்வேலி
கொடைக்கானல் மலை திண்டுக்கல்
கொல்லி மலை நாமக்கல்
சக்கு மலை சேலம்
சிவன் மலை ஈரோடு
செஞ்சி மலை விழுப்புரம்
சென்னி மலை ஈரோடு
சேர்வராயன் மலை சேலம்
தீர்த்த மலை தர்மபுரி
பச்சை மலை பெரம்பலூர்
பழனி மலை திண்டுக்கல்
மகேந்திரகிரி மலை திருநெல்வேலி
மருந்துவாழ் மலை கன்னியாகுமரி
ரத்னகிரி மலை வேலூர்
வள்ளிமலை வேலூர்
ஜவ்வாது மலை வேலூர்

பதிவைப் பற்றிய உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்படுகிறது. பதிவு பயனுள்ளதாக நீங்கள் கருதினால் உங்கள் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் அறியத் தாருங்கள். விருப்பப்பட்டால் கீழிருக்கும் திரட்டிகளில் இணைத்து உங்கள் ஓட்டையும் பதிவு செய்யலாம். இதனால் பதிவு பலரையும் சென்றடைய ஒரு வாய்ப்பாக அமையும். இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பமே..!!



www.thangampalani.com thanks

திருச்சிராப்பள்ளி மாவட்டம்


மாவட்டங்களின் கதைகள் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்(Trichy)




திருச்சிராப்பள்ளி மாவட்டம்

தென்னிந்திய வாழைச் சாகுபடியில் முன்னணிப் பகுதி

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 திருச்சி
பரப்பு
 4.403 .கி.மீ.
மக்கள்தொகை
 24,18,366
ஆண்கள்
 12,08,534
பெண்கள்
 12,09,832
மக்கள் நெருக்கம்
 549
ஆண்-பெண்
 1,001
எழுத்தறிவு விகிதம்
 77.90
இந்துக்கள்
 20,40,989
கிருத்தவர்கள்
 2,18,033
 இஸ்லாமியர்
1,56,345
புவியியல் அமைவு
அட்சரேகை
 100-110.30 N
தீர்க்கரேகை
 770-45-780.50E

இணையதளம்:
www.trichy.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtry@tn.nic.in
தொலைபேசி: 0431-2416358

எல்லைகள்: கிழக்கில் தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களும்; வடக்கில் சேலம், பெரம்பலூர் மாவட்டங்களும், மேற்கில் நாமக்கல் மாவட்டமும்; திண்டுக்கல் மதுரை மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: இன்றைய திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியான உறையூர் கி.மு. 300-லிருந்து சோழர்களின் தலைநகரமாக விளங்கியதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.

களப்பிரர் காலத்திலும் (கி.பி. 300-575) உறையூர் சோழர்களின் கீழ் இருந்திருக்கலாமென வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கி.பி. 590-இல் முடிசூடிய முதலாம் மகேந்திரவர்மர் காலத்தில் உறையூரும், இன்றைய திருச்சிராப்பள்ளியின் பழைய பகுதிகளும் பல்லவராட்சியின் கீழ் வந்தன. கி.பி. 880 வரை இப்பகுதி பல்லவர், பாண்டியர் ஆட்சியின் கீழ் மாறி மாறி இருந்தது.

கி.பி. 880-இல் ஆதித்த சோர் பெற்ற வெற்றி இப்பகுதியைச் சோழப் பேராட்சியில் கீழ் கொண்டு வந்தது.  கி.பி. 1225-இல் ஹொய்சால மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு, பின்பு இரண்டாம் பாண்டிய பேர்ரசின் கீழ் சில ஆண்டுகள் இருந்த திருச்சிராப்பள்ளி, முகமதியர்களின் ஆட்சிக்குட்பட்டது.

நாயக்கர்கள், விஜய நகர அரசர்களின் முகவர்களாக இப்பகுதியை ஏறத்தாழ 1736 வரை ஆண்டார்கள்.  அரசி மீனாட்சியுடன் நாயக்ககராட்சி முடிவுற்றது.

தொடர்ந்து முகமதியர் ஆட்சி, ஆற்காடு நவாபுகளின் மரபில் வந்த சந்தாசாகிபு, முகமதலி போன்றோரின் கையில் சில ஆண்டுகள் இருந்த இப்பகுதி, இறுதியில் ஆங்கில ஆட்சிக்குட்பட்டது.

நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது.  (திருச்சிராப்பளி, கரூர் மற்றும் பெரம்பலூர்)

முக்கிய ஆறுகள்: காவிரி, அரியார், கோரையார், அய்யாறு, நந்தலாறு, ஊப்பாறு.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 3: திருச்சி, லால்குடி, முசிறி
தாலுகாக்கள் - 8: திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடிஇ, துறையூர், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், தொட்டியம்
மாநகராட்சி-1: திருச்சி,
நகராட்சிகள்-3: மணப்பாறை, துறையூர், தூத்துக்குடி.
ஊராட்சி ஒன்றியங்கள் -14: அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மண்ணச்ச நல்லூர், முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, லால்குடி, புள்ளம்பாடி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, உப்பியாபுரம், துறையூர்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

மலைக்கோட்டை: உலகின் மிகப்பழமையான பாறை (3800 மில்லியன் ஆண்டுகள் பழமை) என்ற சிறப்புடைய இது 83. மீ. உயரம் கொண்டது.

உச்சிப்பிள்ளையார் கோவில்: மலைக்கோட்டையில் 344 படிகளைக் கடந்து ஏறிச்சென்றால் இக்கோயிலை தரிசிக்கலாம்.

கல்லணை: கரிகால் பெருவளத்தானால் கட்டப்பட்ட கல்லணை பண்டைத் தமிழர்களின் பொறிய்யியல் திறனுக்கு சான்றற பகர்ந்து நிற்கிறது.

ஏரக்குடி சிறுநாவலூர்: நவாப் காலத்தில் கட்டப்பட்ட அழகிய தானியக் களஞ்சியம்.

ஸ்ரீரங்கம் ராகவேந்தரர் மடம்: 

இங்கே ராகவேந்திர்ரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாகத் தீட்டபட்டுள்ளது.

இருப்பிடமும் சிறப்பியல்களும்:

இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன.
விமான நிலையம்வானொலி நிலையம் அமைந்துள்ளது.
தாயுமானவர் வாழ்ந்த பூமி.
துப்பாக்கித் தொழிறைசாலையும்பொன் மலை இரயில்வே பணினையும்தேசிய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் (என்.ஐ.டி)N.I.T இந்நகரின் தனிச் சிறப்பு.
புத்த மதம் செழித்த பூமி.
முக்கிய கனிமங்கள்சுண்ணாம்புக்கல்குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பார்ஜிப்சம்வெள்ளைக் களிமண்கார்னட்.
திருக்கோகர்ணேஸ்வரர் ஆலையம்: இது மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கட்டபட்ட குடைவரைக் கோயில்.
பெல்(BHEL) - மின்சார உற்பத்திக்கான பாய்லர்களை தயாரிக்கும் நிறுவனம் 2008 இல் இதன் வருமானம் ரூ.7500 கோடி.
பேப்ரிகேஷன் துறையின் மையம் என்ற சிறப்பு பெற்றுவருகிறது.
மத்திய அரசின் படைக்கலத் தொழிற்சாலை.


பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் பின்னூட்டம் இடவும். எமது மாவட்டங்களின் கதைகள் வரிசையில் அடுத்த மாவட்டம் 
திருநெல்வேலி மாவட்டம்.


www.thangampalani.com thanks

நாமக்கல் மாவட்டம்



மாவட்டங்களின் கதைகள் - நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)




நாமக்கல் மாவட்டம்

தமிழகத்தின் கோழிப்பண்ணை மாவட்டம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 நாமக்கல்
பரப்பு
 3,363 .கி.மீ.
மக்கள்தொகை
 14,93,462
ஆண்கள்
 7,59,551
பெண்கள்
 7,33,911
மக்கள் நெருக்கம்
 439
ஆண்-பெண்
 966
எழுத்தறிவு விகிதம்
 67.41%
இந்துக்கள்
 14,51,966
கிருத்தவர்கள்
 13,137
இஸ்லாமியர்
 26,907


புவியியல் அமைவு

அட்சரேகை: 110-110.36N
தீர்க்க ரேகை: 770.28-780.30E

எல்லைகள்: இதன் கிழக்கே பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களும், மேற்கே ஈரோடு மாவட்டமும்: வடக்கே சேலம் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சேலம் மாவட்டத்தில் இருந்தது 1997, ஜனவரி ஒன்றாம் தேதி நாமக்கல் மாவட்டம் உருவாக்கபட்டது.

கனிமம்: மேக்னசைட், பாக்சைட், குவார்ட்ஸ், சுண்ணாம்புக்கல், கிரானைட்

முக்கிய ஆறுகள்: காவிரி

முக்கிய இடங்கள்: 

ஐயாறு: சித்தன் குட்டி மலை உச்சியில் தோன்றும் ஆரோச்சி ஆறு, காப்பபாடியாறு, மூலை, ஆறு, மாசிமலை அருவி, நக்காட்டடி ஆறு என்னும் ஐந்ததுஆறுகள் சங்கமித்து ஒன்றாக உருவெடுத்து வருவதால் இதற்கு  இப்பெயர் வந்தது.  4500 அடி உயரத்திலிருந்து வரும் இந்த ஆற்றுக்கு வெள்ளைப் பாழி ஆறு என்றும் பெயர் உள்ளது.  கொல்லிமலையின் பல இடங்களைத் தொடும் இந்த ஆறு, அங்குள்ள அரப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு அப்பால் விழுந்து ஆகாச கங்கை எனப் பெயர் பெறுகிறது.  புளியஞ்சோலை என்னும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

கொல்லிமலை ஆகாச கங்கை: சுமார் 1190 மீ. உயரமுள்ள கொல்லிமலை முழுவதும் மூலிகைகள் நிறைந்தது.  அரசு மூலிகைப் பண்ணை தாவரத்தோட்டம் உள்ளது.  ஆகாச கங்கையருவி மூலிகை மகத்துவம் மிக்கது. பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன.  ஆண்டுதோறும் இங்கு கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரிக்கு விழா நடத்தப்படுகிறது.

கொல்லிமலை - ஆகாச கங்கை


கொல்லிமலை - இயற்கை காட்சிகள்
கொல்லிமலையின் ஒரு பகுதி

பனிபடர்ந்த எழிலார்ந்த கொல்லிமலை


பனிபடர்ந்த கொல்லிமலை

நாமக்கல் ஆஞ்சநேயர்: ஒரே கல்லில் 200 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட அனுமன் கோயில்.





அர்த்தநாரீஸ்வரர் கோயில்: தமிழகத்தில் சிவபெருமான் அர்த்தநீஸ்வரராகக் காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுதான்.  இக்கோயில் மூலவரின் உயரம் ஐந்து அடி.  மூலவர் சிலையை சித்தர்கள் மூலிகைகளால் வடித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

திருச்செங்கோடு மலையின் முன் பகுதி தோற்றம்

கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவில்லம்:

இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களின் புகழ்பெற்ற இவ்விடுதலைவீரர் நினைவாக 2000 ஆண்டு திறக்கப்பட்டது.

நாமக்கல் கவிஞரின் நினைவில்லம் இப்போது நூலகமாக..
நாமக்கல் துர்க்கம் கோட்டை: உறுதிமிக்க இக்கோட்டைத் தூண் வரலாற்றுத் தொடர்ச்சியாக இம்மாவட்டத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது.
நாமக்கல் கோட்டை

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்: நாமக்கல், திருச்சிங்கோடு
தாலுகாக்கள்: -4: நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி, - வேலூர், இராசிபுரம்
நகராட்சிகள்- 5: நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம்,ராசிபுரம், பள்ளிப்பாளையம்

ஊராட்சி ஒன்றியங்கள்-15: எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை,மல்ல முத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிப்பாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர்.

இருப்பிடமும், சிறப்புகளும்: 

சென்னையிலிருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ளது.

பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகள் கொல்லிமலையில் உள்ளன.

தமிழகத்திலேயே அதிக மினிப் பேருந்துகள் இயங்கும் மாவட்டம் இது.

கோழிப்பண்ணைத் தொழில் முக்கியமானது.

லாரித் தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது.

கொல்லிமலை, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம்

முக்கிய தொழில்கள்:  சங்ககிரி இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை(Sankakiri Indian cement industry), திருச்செங்கோடு நூற்பாலைகள்(Textile Thiruchengode), குமாரபாளையம் சோப்புத் தொழில். , kumarapalaiyam soap industry.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர்ர் கோயில், காளிப்பட்டி ஸ்ரீ கந்தசாமி கோவில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில்.

குறிப்பிடத்தக்கோர்: தீரன் சின்னமலை, டாக்டர்.பி. சுப்பராயன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.

இடுகைத் தொடர்பான பொது அறிவு தகவல்கள்:

ஒரு சிலரை பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். அவ்வாறான பெயர்கள் மாவட்டங்களுக்கும் உண்டு.

ஒவ்வொரு மாவட்டங்கும் ஒரு அடைமொழி உண்டு.
இராமநாதபுரம்
 புனித பூமி
ஈரோடு
 வாணிப மையம்
கரூர்
 நெசவாளர்களின் வீடு
ஈரோடு
 வாணிப மையம்
கன்னியாகுமரி
 இந்தியாவின்  தென்நில எல்லை
காஞ்சிபுரம்
 ஆலைய நகரம்
கோயம்புத்தூர்
 தென்ன மான்செஸ்டர்
சிவகங்கை
 சரித்திரம் உறையும் பூமி
சென்னை
 தென்னிந்தியாவின் நுழைவாயில்
சேலம்
 மாம்பழ நகரம்
தஞ்சாவூர்
 தமிழக அரிசிக் கிண்ணம்
தரும்புரி
 தோட்டப்பயில் பூமி
திண்டுக்கல்
 பூட்டு நகரம்
திருச்சி
 மலைக்கோட்டை நகரம்
திருநெல்வேலி
 தென்னிந்திய ஆக்ஸ்ஃபோர்ட்
தூத்துக்குடி
 முத்து நகரம்


பதிவில் இருக்கும் படங்கள் அனைத்தும் Google search engine மூலம் திரட்டப்பட்டவை.
எமது அடுத்த மாவட்டங்களின் கதைகள் வரிசையில் வர இருப்பது நீலகிரி மாவட்டம். படிக்கத் தவறாதீர்கள் நண்பர்களே.. இந்த பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டம் இட மறக்காதீர்கள். அதேபோல் திரட்டிகளில் ஓட்டும் போடவும். நன்றி!!

மாவட்டங்களின் கதைகள் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்(Trichy)


www.thangampalani.com thanks