புதன், 7 மார்ச், 2012

சென்னை



மாவட்டங்களின் கதைகள் - சென்னை மாவட்டம்(chennai)


சென்னை

தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயில்


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
சென்னை
பரப்பு
 178 .கி.மீ.
மக்கள்தொகை
 43,43,645
ஆண்கள்
 22,19,539
பெண்கள்
 21,24,106
மக்கள் நெருக்கம்
 24,963
ஆண்-பெண்
 957
எழுத்தறிவு விகிதம்
 85.33%
இந்துக்கள்
 35,73,356
கிருத்தவர்கள்
 3,31,261
இஸ்லாமியர்
 3,79,206
புவியியல் அமைவு
அட்சரேகை
 120.9-130.9N
தீர்க்கரேகை
 800.12-800.19E



இணையதளம்www.chennai.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrchn@tn.nic.in
தொலைபேசி: 044-25228025


எல்லைகள்: தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா, ஏனைய திசைகளில் திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.

வரலாறு: முற்காலத்தில் தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1522-இல் போர்த்துக்கீசியர் சென்னை வந்தனர்.

1639-ல் பிரான்சிஸ் டே என்னும் ஆங்கிலேயர், வேங்கடப்பரிடமிருந்து தற்போதைய சாந்தேமுக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமத்தில் தங்கி வாணபம் செய்யும் உரிமையைப் பெற்றார்.

சென்னை நகரம் 1659இல் உருவாக்கப்பட்டது.

1640-இல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.

1688இல் சென்னை மாநகராட்சியக்கப்பட்டது.

1946இல் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

1949 உடன்லடிக்கையை அடுத்து இது ஆங்கிலேயர் வசமானது. அதன் பின் நாடு சுதந்திரம் அடையும்வரை இது ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

1801 - இல் வெல்லெஸ்லி பிரபு 'மெட்ராஸ் மாகாணத்தை' உருவாக்கியபோது மெட்ராஸ் அதன் தலைநகராமானது.

1996-இல் மெட்ராஸ் என்பது சென்னை எனப் பெயர் பெற்றது.

முக்கிய ஆறுகள்: கூவம், அடையாறு, பக்கிங் ஹாம் கால்வாய்.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்:- 1: சென்னை, தாலுகாக்கள்-5: எழும்பூர், நுங்கம்பாக்கம், கோட்டை தண்டையார்பேட்டை, மாம்பலம், கிண்டி, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, பெரம்பூர், புரசைவாக்கம்,

மாநகராட்சி-1: சென்னை

குறிபிடத்தக்க இடங்கள்

அமீர் மகால்: ஆற்காடு நவாப்க்களின் கலைத்திறனின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. 1989-இல் கட்டப்பட்ட இம்மாளிகை 1870 இல் ஆற்காடு அரசு குடும்பத்தாரின் மாளிகையானது.

கன்னிமாரா பொது நூலகம்: மரங்களடர்ந்த சோலைக்குள் அமைந்த மிகப் பழைய நூலகம். இந்தியாவின் தேசிய நூலகங்களில் ஒன்று.

சென்னைப் பல்கலைக் கழகம்: மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள இது, இலண்டன் பலகலைக் கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு 1857 இல் தொடங்கப்பட்டது.

தொழிற்சாலைகள்: பன்னாட்டு கார் தயாரிப்பு ஆலைகள் சென்னையிலும் அதைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இவை தவிர இரயில் பெட்டிகள், சைக்கிள்,மோட்டார் வாகனங்கள், தோல் பொருட்கள், டெலிபிரிண்டர், டயர், இயந்திரத் தொழிற்சாலைகள் மிகுதி.

கிண்டி, அம்பத்தூர் தொழில் மையங்கள்

ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை உள்ளது

சாப்ட்வேர் தொழில் மையமாக வளர்ந்து வருகிறது.

வழிபாட்டிடங்கள்: புனித மேரி தேவாலயம், வேளாங்கன்னி தேவாலயம், மாமூர் மசூதி, பெரிய மசூதி, குருத்வாரா, ஜெயின் குரு மந்திர், மகான் சாந்திநாத் சமணக்கோயில், சின்னமலை தேவாலயம், ஸ்ரீராமகிருஷ்ணா கோயில், திருமலை திருப்பதி தேவாஸ்தானம், சாய்பாபா கோவில், மருந்தீஸ்ரர் திருக்கோயில், காளி பாரிகோயில், மாங்காடு மாரியம்மன் கோவில், அஷ்ட லெஷ்மி கோவில்.


இருப்பிடமும்சிறப்பியல்புகளும்:
தமிழகத்தின் தலைநகரம் சென்னை.
தொழில் துறையில் சிறந்த துறைமுக நகரம்.
அண்ணா நினைவு நூலகம் (2010-இல் திறக்கப்பட்டது.) யுனெஸ்கோ அமைப்புடன் இணைக்கபட்ட இந்தியாவின் இரண்டாவது நகரம்.
மெரினா உலகின் இரண்டாவது பெரிய நீளமான கடற்கரை.
பங்குமார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும்  இணைக்கப்பட்டுள்ளது.
நேப்பியர் பாலம்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1969இல் இரும்பு கிராதிகளால் கட்டபட்டது.  பின்னர் 1943 இல் ஆர்தர் ஹோப் காலத்தில் கான்கிரிட்டால் அகலப்படுத்தப்பட்டு பொது மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கபட்டது.
டைடல் பூங்கா:  தமிழ்நாட்டின் சிலிக்கான் பள்ளத்தாக்குநவீன கட்டிடக் கலையின் அடையாளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக