மாவட்டங்களின் கதைகள் - கோயம்புத்தூர் (Coimbatore)
கோயம்புத்தூர்
தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' எனப்படும் டெக்ஸ்டைல் மாவட்டம்
அடிப்படைத் தகவல்கள்
| |
தலைநகர்
|
கோயம்புத்தூர்
|
பரப்பு
|
7,470 ச.கி.மீ
|
மக்கள் தொகை
|
42,71,656
|
ஆண்கள்
|
21,76,031
|
பெண்கள்
|
20,95,825
|
மக்கள் நெருக்கம்
|
572
|
ஆண்-பெண்
|
963
|
எழுத்தறவிவு விகிதம்
|
75.97%
|
இந்துக்கள்
|
38,47,969
|
கிருத்தவர்கள்
|
1,85,737
|
இஸ்லாமியர்
|
2,27,734
|
புவியியல் அமைவு
| |
அட்சரேகை
|
100.10-110.30N
|
தீர்க்க ரேகை
|
760.40-770.30E
|
இணையதளம்
www.coimbatore.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrcbe@tn.nic.in
தொலைபேசி: 0422-2301320
எல்லைகள்: இதன் வடக்கு மறறும் கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கிலும் தெற்கிலும் மேற்குத்தொடர்ச்சி மற்றும் ஆனைம்மலைத்தொடரும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: சங்க காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
முற்காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து ஏழு கி.மீ. தொலைவிலுள்ள பேரூர் என்பதே மிகப்பெரிய ஊர். கோயம்புத்தூர் இதில் அடங்கிய ஒரு சிறுகிராமமே. திப்புசுல்தான் மறைவிற்குப் பின் (1779), கோயம்புத்தூர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்குட்பட்டது. 1805-இல் கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா சுதந்திரம் அடையும் வரை இது ஆங்கிலேயர் ஆதிக்கதின் கீழிலேயே இருந்து. 1866-இல் கோயம்புத்தூர் நாகராட்சியானது.
முக்கிய ஆறுகள்: சிறுவாணி, அமராவதி.
குறிப்பிடத்தக்க இடங்கள்:
குழந்தை ஏசு தேவலாயம்: கிருத்தவர்களின் வணக்கத்ததிற்குரிய பெருமை மிகு தேவாலயம், கோயம்புத்தூர் நகருக்கு மிக அருகில் கோவைப்புதூரில் அமைந்துள்ளது.
கோட்டை மேடு மசூதி: இஸ்லாமியக் கட்டடக்கலையின் சிறப்புகளைக் கொண்ட கோவையில் எழுந்த முதல் மசூதி என்ற பெருமை கொண்டது. இதன் பிரிவாக ஒரு உருது கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.
ஈஷா யோக மையம்: சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் உருவாக்கட்ட தியானலிங்கம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது.
வால்பாறை: மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதி மிகப் பெரிபலமான சுற்றுலாத்தலம். தேயிலைத் தோட்டங்களும், பண்ணைகளும் நிறைந்த பசுஞ்சோலை.
ஆனைமலை விலங்குகள் சரணாலயம்: மேற்குத்தொடர்ச்சி மலையில் 1400மீ. உயரத்தில் 958 ச.கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது. இங்கு யானை, காட்டெருமை, தேவாங்கு, கரடிகள், கரும் பொன்னிறப் புறவைகள், எற்முப்துத் தின்னி போன்றவைகளைக் காணலாம்.
சிறுவாணி அருவி: உலகச்சுவை நீர் தரத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றது சிறுவாணி ஆற்று நீர். இது 'கோவையின் குற்றாலம்' எனவும் சிறப்பிக்கப்படுகிறது.
காரமடை ரெங்கநாதர் ஆலயம்: விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோயம்பத்தூரின் மிகப் பழமையான இரண்டாவது ஆலயமான இங்கு ரெங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கொங்கு நாட்டு திருப்பதி: கொங்கு திருப்பதி என அழைக்கப்படும் இங்கு புரட்டாசி சனிக்கிழமை விஷேசமானது.
தேசியப் பூங்காக்கள்
முதுமலை - நீலகிரி
கிண்டி - சென்னை
மன்னார் வளைகுடா - இராமநாதபுரம்
இந்திராகாந்தி பூங்கா - கோயம்புத்தூர்
முக்குறுத்தி - நீலகிரி
இருப்பிடமும் சிறப்பியல்புகளும்:
சென்னையிலிருந்து 532 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
|
தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் ஆனைமுடி (2697 மீ)
|
தமிழகத்தின் முன்னணித் தொழில் நகரம்.
|
பங்குச் சந்தை செயல்பட்டு வருகிறது.
|
கோயம்புத்தூரில் விமான நிலையம் உள்ளது.
|
அமராவதி நீர்தேக்கம்
|
'தென்னாட்டு காசி' என்றழைக்கப்படும் அவினாசி லிங்கேஸ்வர்ர் ஆலையம் கோவையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.
|
அறுபடை வீடுகளில் ஒன்றான மருத மலை.
|
'வாழ்க வளமுடன்' என்ற அருள் வாசகம் தந்த அருட்தந்தை யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியால் நிறுவப்பட்டதே ஆழியாறு அறிவுத் திருக்கோயில்.
|
குறிப்பிடத்தக்கோர்:
உடுமலை நாராயண கவி
ஜி.டி. நாயுடு
அவிநாசிலிங்கம் செட்டியார்
சி. சுப்பிரமணியம்
பொள்ளாச்சி மகாலிங்கம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக