மாவட்டங்களின் கதைகள் - கரூர் மாவட்டம் (Karur)
கரூர் மாவட்டம்
தலைநகர்
|
கரூர்
|
பரப்பு
|
2,396 ச.கி.மீ
|
மக்கள்தொகை
|
9,36,686
|
ஆண்கள்
|
4,68,538
|
பெண்கள்
|
4,70,148
|
மக்கள் நெருக்கம்
|
323
|
ஆண்-பெண்
|
1,010
|
எழுத்தறிவு விகிதம்
|
68.08%
|
இந்துக்கள்
|
8,83,584
|
கிருத்தவர்கள்
|
13,863
|
இஸ்லாமியர்
|
37,272
|
புவியியல் அமைவு
| |
அட்சரேகை
|
110-120N
|
தீர்க்க ரேகை
|
770.28-780.50E
|
இணையதளம்:
www.karur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல் : collrkar@tn.nic.in
தொலைபேசி: 04324-257555
எல்லைகள்: இதன் வடக்கில் நாமக்கல் மாவட்டமும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி தாலுகாவும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்ம், தெற்கில் சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும், மேற்கில் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: சங்ககால சேர்ர்களின் தலைநகரமாகக் கருதப்படுகிறது. (கருவூர்/வஞ்சி) கிரேக்க அறிஞர் தாலமி கரூரை தமிழகத்தின் உள்நாட்டு முக்கிய வாணிப மையமாக குறிப்பிடுகிறார்.
துவக்கத்தில் சேர, சோழ, பல்லவ, நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது. 1783இல் திப்பு சுல்தானுடன் ஏற்பட்ட போரில் பிரிட்ஷார் கரூர் கோட்டையை அழித்தனர். (ராயனூர் அருகே ஆங்கில - மைசூர் போரில் உயிரிழந்த வீர்ர்களுக்காக ஒரு நினைவில்லம் உள்ளது)
பிரிட்டீஷ் ஆட்சியில் துவக்கத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்துடனும் இணைந்திருந்த்து.
1995-இல் திருச்சி மாவட்டம் பெரம்பலூர், கரூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது கரூர் புதிய மாவட்டமாக உதயமானது.
முக்கிய ஆறுகள்: காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, கீழ் பவானி, நங்காஞ்சி ஆறு
நிர்வாகப் பிரிவுகள்
வருவாய் கோட்டங்கள் - 2; கரூர், குளித்தலை.
தாலுகாக்கள் - 4; கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணாராயபுரம்,
நகராட்சிகள்-4: குளித்தலை, கரூர், இனாம் கரூர், தாந்தோணி
ஊராட்சி ஒன்றியங்கள் - 8; கரூர், தாந்தோணி, கே.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர்.
குறிப்பிடத்தக்க இடங்கள்
பசுபதேஸ்வரர் ஆலயம்: சிலவத் தலங்கள் ஏழில் ஒன்றாக்க் கருதப்படுகிறது. ஐந்தடி உயர சிவலிங்கத்தின் மீது மடி சொரியும் பசுவும் ரங்கமாதா சிறபமும் கலை எழில் கொண்டவை.
கல்யான வெங்கடராமசாமி ஆலயம்: கரூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள தாந்தோணி மலையில் சிறு குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோயில் 'தென் திருப்தி' என அழைக்கப்படுகிறது.
புகளூர் காகிதத் தொழிற்சாலை: மரக்கூழைப் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை. இந்தியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.
செட்டிநாடு சிமென்ட் ஆலை: மாவட்டத்தின் புலியூர் பகுதியில் அமைந்துள்ளது. 1962 இல் துவக்கப்பட்ட இத் - தொழிற்சாலை, பின்னலாடை மற்றும் பிற தொழில்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டிடங்கள்: ஐயர் மலை - குளித்தலை, கடம்பர் கோவில், மாரியம்மன் கோவில்.
இருப்பிடமும், சிறப்புகளும்
Ø சென்னையிலிருந்து தென்மேற்கே 371 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
|
Ø குடிசைத் தொழில்கள், நவீன அரசி ஆலைகள், பருத்தி, பித்தளைப் பாத்திர தயாரிப்புபோன்றவற்றிற்கு பெயர் பெற்றது
|
Ø சுண்ணாம்புக்கல், ஜிப்சம், வெள்ளைக் களிமண் போன்ற கனிமங்கள் நிறைந்த்து.
|
Ø 1942 இல் துவங்கப்பட்ட ஈஐடி பாரி நிறுவனம், சர்க்கரை உற்பத்தியில் உலகளவில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
|
Ø செட்டிநாடு சிமென்ட் ஆலை, தமிழ் நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
|
Ø செட்டிநாடு சிமென்ட் ஆலை, தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ் ஆலைகள் குறிப்பிடத்தக்கவை.
|
Ø ஏற்றுமதி தரத்திலான கொசுவலை உற்பத்திக்கு புகழ்பெற்றது.
|
Ø கைத்தறியாடைகளுக்குப் புகழ்பெற்ற மாவட்டம்.
|
Ø அனைத்து வாகனங்களுக்கும் தேவையான செயின் தொழிற்சாலை இங்குள்ளது. தமிழ்நாடுமட்டுமல்லாது அண்டை மாநிலத்திலிருந்தும் பேருந்து பாடி கட்ட இங்கு வருகிறார்கள்.
|
எமது அடுத்த 'மாவட்டங்களின் கதைகள்' வரிசையில் வர இருப்பது தமிழ்நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் ஒரே மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய பதிவு. எதிர்பாருங்கள் நண்பர்களே..!
தொடர்புடைய பதிவுகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக